சிங்கப்பூரில் புதிதாக 242 பேருக்குக் கிருமித்தொற்று, சமூக அளவில் சிங்கப்பூரர் ஒருவருக்கு பாதிப்பு
சிங்கப்பூரில் புதிதாக 242 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் புதிதாக 242 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54,797.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
சமூக அளவில், சிங்கப்பூரர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
புதிதாகக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோரில் 6 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.
சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து அவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.