Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இன்று புதிதாக 15 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று; சமூக அளவில் இருவருக்குப் பாதிப்பு

சிங்கப்பூரில் இன்று புதிதாக 15 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் இன்று புதிதாக 15 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 57,715 ஆனது.

சமூக அளவில் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோரில் 6 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

சிங்கப்பூருக்குத் திரும்பியதிலிருந்து அவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்