சிங்கப்பூரில் இன்று புதிதாக 614 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று - மொத்த எண்ணிக்கை 30,000ஐத் தாண்டியது
சிங்கப்பூரில் இன்று புதிதாக 614 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று - மொத்த எண்ணிக்கை 30,000ஐத் தாண்டியது
சிங்கப்பூரில் இன்று புதிதாக 614 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,000ஐத் தாண்டியது.
இதுவரை மொத்தம் 30,426 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
4 பேர், சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
மேல் விவரங்களை சுகாதார அமைச்சு இன்றிரவு வெளியிடும்.