நாடாளுமன்றக் கூட்டத்தில் கலைத் துறைக்கான உதவி, வீடுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம்
நாடாளுமன்றக் கூட்டத்தில் கலைத் துறைக்கான உதவி, வீடுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம்
சிங்கப்பூரில், நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டம் மே 26 ஆம் தேதி இடம்பெறவிருக்கிறது.
அப்போது கலைத் துறைக்கான உதவி, வீடுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிருமித்தொற்றை எதிர்த்து எப்படி அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்பது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கப்படும்.
துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியெட் மக்களுக்கும் வர்த்தகங்களுக்கும் மேலும் சில ஆதரவுத் திட்டங்களை அறிவிக்க உள்ளார்.
அன்று பிற்பகல் 3:30 மணிக்கு, திரு. ஹெங் அமைச்சர் நிலை அறிக்கையை வெளியிட்டுப் பேசுவார்.