Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் பெய்யும் கனத்த மழையால் மலர், செடிகொடிகளின் விற்பனை கடுமையாகப் பாதிப்பு

 சிங்கப்பூரில் பெய்யும் கனத்த மழையால் மலர், செடிகொடிகளின் விற்பனை கடுமையாகப் பாதிப்பு

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் இடைவிடாமல் பெய்யும் கனத்த மழையால் மலர், செடிகொடிகளின் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மாதத்தில் மழை பெய்திருக்கிறது. அதனால், மக்களின் வழக்கமான நடமாட்டம் குறைந்துவிட்டது. பெரும்பாலோர் வீட்டிலேயே பொழுதைக் கழிக்கின்றனர்.

எனவே மலர், செடிகளின் அன்றாட விற்பனை வழக்கத்தைவிடப் பாதியாகக் குறைந்துவிட்டது.

அவற்றை விற்பனை செய்யும் பெரும்பாலான கடைகளுக்குச் செல்லக் கூரை வேயப்பட்ட நடைபாதை இல்லை. அதனால் தேடிச் சென்று வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.

சீனப் புத்தாண்டுக்கு முன், மழை ஓய்ந்து புது மலர்ச்சி ஏற்படும் என்று வியாபாரிகள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்