COVID-19: சிங்கப்பூரில் மேலும் 4 பேர் குணமடைந்தனர் - 36 பேர் மருத்துவமனையில்
COVID-19: சிங்கப்பூரில் மேலும் 4 பேர் குணமடைந்தனர் - 36 பேர் மருத்துவமனையில்
சிங்கப்பூரில் நேற்று மேலும் 4 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வசிப்பிடம் திரும்பியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 58,071 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.
இன்னும் 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
30 பேர் சமூகத் தனிமைப்படுத்தும் வசதிகளில் பராமரிக்கப்படுகின்றனர்.
அவர்களிடம் நோய்த்தொற்றுக்கான லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றால் 58,165-பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாண்டோர் எண்ணிக்கை 28 ஆக உள்ளது.