COVID-19: நேற்று மேலும் 210 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வசிப்பிடம் திரும்பினர்
சிங்கப்பூரில் நேற்று மேலும் 210 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வசிப்பிடம் திரும்பியுள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 46,308 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.
சிங்கப்பூரில் நேற்று மேலும் 210 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வசிப்பிடம் திரும்பியுள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 46,308 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.
இன்னும் 148 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் யாரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இல்லை.
5,326 பேர் சமூகத் தனிமைப்படுத்தும் வசதிகளில் பராமரிக்கப்படுகின்றனர். அவர்களிடம் நோய்க்கான லேசான அறிகுறி மட்டுமே காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.