COVID-19: சிங்கப்பூரில் மேலும் 15 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தனர்
சிங்கப்பூரில் மருத்துவமனைகளிலிருந்தும் சமூகத் தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்தும் நேற்று மேலும் 15 பேர் குணமடைந்து வசிப்பிடம் திரும்பினர்.
சிங்கப்பூரில் மருத்துவமனைகளிலிருந்தும் சமூகத் தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்தும் நேற்று மேலும் 15 பேர் குணமடைந்து வசிப்பிடம் திரும்பினர்.
சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றிலிருந்து முழுமையாக உடல்நலம் தேறியோரின் மொத்த எண்ணிக்கை 59,746 ஆனது.
மருத்துவமனைகளில் 19 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.
மேலும் 85 பேர் சமூகத் தனிமைப்படுத்தும் வசதிகளில் உள்ளனர்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,879.
கொரோனா கிருமித்தொற்றால் 29 பேர் மாண்டனர்.