COVID-19 சூழலில் இணையத்தில் மளிகைப் பொருள்களுக்கான தேவை அதிகரித்தது - ISEAS ஆராய்ச்சிக் கழகம்
இணையத்தில் மளிகைப் பொருள்களுக்கான தேவை கிருமிப்பரவல் சூழலில் அதிகரித்ததாக ISEAS ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் மளிகைப் பொருள்களுக்கான தேவை கிருமிப்பரவல் சூழலில் அதிகரித்ததாக ISEAS ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு எச்சரிக்கை நிலை அதிகரிக்கப்பட்ட ஒவ்வொருமுறையும் நூடல்ஸ் போன்ற திடீர் சமையல் பொருள்கள், முட்டைகள், டிஷ்யூ தாள்கள் போன்றவற்றின் விற்பனை வெகுவாக அதிகரித்தது.
மக்கள் அலை அலையாகச் சென்று அத்தகைய பொருள்களை அவசரகாலத்துக்காக அதிக அளவில் வாங்கினர்.
கடைகளில் குறிப்பிட்ட சில அத்தியாவசியப் பொருள்கள் சீக்கிரமாக விற்றுமுடிந்தன. அதிகரித்துள்ள தேவைக்கு ஏற்ப பொருள்களை நிரப்ப முடியாமல் கடைக்காரர்கள் சிரமப்பட்டனர்.