Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிரிமியர் லீக் காற்பந்து வீரருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக 19 வயது சிங்கப்பூரர்மீது குற்றச்சாட்டு

பிரிமியர் லீக் காற்பந்து வீரருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக 19 வயது சிங்கப்பூரர்மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -

பிரிமியர் லீக் காற்பந்து வீரர் நீல் மெளபேவுக்கு (Neal Maupay) கொலை மிரட்டல் விடுத்ததாக சிங்கப்பூரில் இளையர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Brighton & Hove Albion குழுவின் விளையாட்டாளர் மெளபேவை இணையம்வழி மிரட்டியதாக 19 வயது டேரக் இங் டி ரென்னின்மீது குற்றச்சாட்டுப் பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் ஆர்சனலுக்கும் பிரைட்டனுக்கும் இடையிலான ஆட்டத்துக்குப் பிறகு இங் Instagramவழி நேரடியாக நான்கு முறை மிரட்டல் விடுக்கும் பதிவுகளை அனுப்பியதாகக் கூறப்பட்டது.

ஆட்டத்தில் ஆர்சனல் வீரர் பெர்ண்ட் லெனோவுக்கு மெளபேயால் கடும் காயம் ஏற்பட்டது.

அன்று இரவு இங், அந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு, மெளபேயை மிரட்டியிருக்கிறார்.

அதில் அவருக்குப் பதில் மெளபேயின் அன்புக்குரியவர்கள் அவதியுறும்போது வலி அதிகம் இருக்கும் என்று இங் எழுதியிருந்தார்.

அதற்குப் பிறகு அனுப்பப்பட்ட பதிவுகளில் இங் தொடர்ந்து மெளபேயின் குடும்பத்திற்கும் அவருக்கும் மனவுளைச்சல் தரும்வகையில் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகக் குற்றப்பத்திரிக்கை கூறியது.

அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தின் கீழ் இங் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5,000 வெள்ளிவரை அபராதமோ, ஆறு மாதம்வரைச் சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்