Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பெட்ரா பிராங்கா தீவுக்கருகே கப்பல் கவிழ்ந்து மூழ்கியது

சிங்கப்பூர்க் கடல்பகுதியில், பெட்ரா பிராங்கா தீவுக்கு அருகில் கப்பல் ஒன்று கவிழ்ந்து நீரில் மூழ்கியது.

வாசிப்புநேரம் -
பெட்ரா பிராங்கா தீவுக்கருகே கப்பல் கவிழ்ந்து மூழ்கியது

(படம்: TODAY)

சிங்கப்பூர்க் கடல்பகுதியில், பெட்ரா பிராங்கா தீவுக்கு அருகில் கப்பல் ஒன்று கவிழ்ந்து நீரில் மூழ்கியது.

கரீபிய நாடான டொமினிகாவின் சரக்குக் கப்பல் மூழ்கியது குறித்து காலை 7.15 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.

அந்தக் கப்பலிலிருந்த இந்தோனேசிய ஊழியர்கள் மூவரை அருகில் சென்று கொண்டிருந்த மற்றொரு சரக்குக் கப்பலைச் சேர்ந்தவர்கள் காப்பாற்றினர்.

காப்பற்றப்பட்ட மூவரும் பாதுகாப்பாய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ, கடலில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை.

சிங்கப்பூர் நீரிணையில் போக்குவரத்து சீராக இருப்பதாகவும், சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் ஆணையம் கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்