Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அடுத்த 2 வாரங்களுக்கு இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்...கையில் குடையுடன் செல்வது நல்லது

பருவமழைக்கு இடைப்பட்ட வானிலை இம்மாதம் தொடங்குவதால் அடுத்த வாரங்களுக்கு சிங்கப்பூரில்  இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -

பருவமழைக்கு இடைப்பட்ட வானிலை இம்மாதம் தொடங்குவதால் அடுத்த வாரங்களுக்கு சிங்கப்பூரில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்திருக்கிறது.

பிற்பகலிலும், மாலை நேரத்திலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உண்டு என்றும் ஆய்வகம் குறிப்பிட்டது.

இந்தக் காலக்கட்டத்தில், அதிகமான மின்னலையும் எதிர்பார்க்கலாம்.

மழை பெய்யும்போது, அது குறுகிய நேரத்துக்கு மிதமான அல்லது கனத்த மழையாக இருக்கும்.

பலத்த இடி, மின்னல் ஆகியவற்றுடன் கூடிய மழையையும் எதிர்பார்க்கலாம். சிங்கப்பூரின் அனைத்துப்
பகுதிகளிலும் மழை பெய்யும் என ஆய்வகம் தகவல் அளித்தது.

சில நாள்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்பதால் அது மாலை நேரம் வரை நீடிக்கலாம் என ஆய்வகம் குறிப்பிட்டது.

ஏப்ரல் மாதம், ஆண்டின் ஆக வெப்பமான மாதங்களில் ஒன்று.

அதனால் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸுக்கும் 34 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்டிருக்கும்.

சில நாள்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை எட்டும் வாய்ப்புகள் உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்