உமிழ்நீர் மாதிரியின் மூலம் COVID-19 நோய்த்தொற்றை அடையாளங்காணும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ள சிங்கப்பூர் ஆய்வாளர்கள்
சிங்கப்பூர் ஆய்வாளர்கள் சிலர், COVID-19 நோய்த்தொற்றை உமிழ்நீர் மாதிரியின் மூலம் மேலும் துரிதமாக அடையாளங்காண உதவும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.
சிங்கப்பூர் ஆய்வாளர்கள் சிலர், COVID-19 நோய்த்தொற்றை உமிழ்நீர் மாதிரியின் மூலம் மேலும் துரிதமாக அடையாளங்காண உதவும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.
Duke-NUS மருத்துவப் பள்ளி, சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை, சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் நிலையம் ஆகியவை இணைந்து புதிய Antigen விரைவுப் பரிசோதனையை உருவாக்கியுள்ளன.
PASPORT என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது புதிய பரிசோதனை.
அதன்படி, ஒருவரின் உமிழ்நீர் பரிசோதிக்கப்படும்.
சில நிமிடங்களுக்குள் பரிசோதனை முடிவுகள் கிடைத்துவிடும்.
PASPORT தொழில்நுட்பம் PCR பரிசோதனைக்கு நிகரானது என்றும் கட்டணம் மலிவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அத்துடன் PASPORT பரிசோதனையை மேற்கொள்ள கூடுதல் சாதனங்களோ, சிறப்புப் பயிற்சி பெற்ற அதிகாரிகளின் உதவியோ தேவைப்படமாட்டா.
சிங்கப்பூர் நிறுவனமான Digital Life Lineஉடன் இணைந்து புதிய கருவியைச் சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கான பணிகளில் Duke-NUSஉம் SingHealth குழுமமும் ஈடுபட்டுள்ளன.
அடுத்த 3 முதல் 6 மாதத்திற்குள் அது விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.