சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை வளாகத்தில் கூடுதலாக 1,000 வாகன நிறுத்துமிடங்கள்
சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை வளாகத்திற்குச் செல்வோர் இனி சீரான போக்குவரத்தையும் குறைவான நெரிசலையும் எதிர்பார்க்கலாம்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)
சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை வளாகத்திற்குச் செல்வோர் இனி சீரான போக்குவரத்தையும் குறைவான நெரிசலையும் எதிர்பார்க்கலாம்.
ஊட்ரம் சமூக மருத்துவமனை திறக்கப்பட்ட பிறகு, சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை வளாகத்தில் கூடுதலாக 1,000 வாகன நிறுத்துமிடங்களை எதிர்பார்க்கலாம்.
இந்த மாதம் 29ம் தேதி புதிய சாலைக் கட்டமைப்பு திறக்கப்படும் என்று சிங்ஹெல்த் தெரிவித்தது.
தற்போதைய இணைக்கப்பட்ட சாலைக் கட்டமைப்பில், வாகனமோட்டிகள் சில இடங்களை மீண்டும், மீண்டும் கடக்க நேரிடுகிறது.
புதிய கட்டமைப்பில் தனித்தனியான 3 சாலைகள் அமைவதால் செல்லவேண்டிய இடங்களுக்கு வாகனமோட்டிகள் எளிதில் சென்றடைய முடியும்.
College Road வழியாக, மருத்துவமனையின் புளோக்குகள் 2,3,4,தேசியப் புற்றுநோய் நிலையம் ஆகியவற்றுக்குக் கம்போங் பாரு ரோடு அல்லது ஜாலான் புக்கிட் மேரா வழியாகச் செல்லவேண்டும்.
சிங்கப்பூர் தேசியக் கண் நிலையம், நீரிழிவு நிலையம், மருத்துவமனையின் புளோக்குகள் 5,6,7 ஆகியவற்றுக்கு ஊட்ரம் ரோடு வழியாகச் செல்லவேண்டும்.
தற்போதைய Hospital Drive பாதை, Hospital Crescent என்று பெயர் மாற்றப்படும்.