Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தீச்சம்பவம் - 70 பேர் வெளியேற்றம்

சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் அடித்தளத்தில் நேற்று பிற்பகல் தீ மூண்டது. அதைத் தொடர்ந்து அங்கிருந்து 70 பேர் வெளியேற்றப்பட்டனர். 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தீச்சம்பவம் - 70 பேர் வெளியேற்றம்

கோப்புப் படம்

சிங்கப்பூர் பொது மருத்துவமனையின்
அடித்தளத்தில் நேற்று பிற்பகல் தீ மூண்டது. அதைத் தொடர்ந்து அங்கிருந்து 70 பேர் வெளியேற்றப்பட்டனர்.

புளோக் 2-இல் உள்ள அடித்தளம் ஒன்றில் புகை அபாய ஒலி பிற்பகல் மணி 1:50 அளவில் ஒலிக்கத் தொடங்கியதாக மருத்துவமனைத் தெரிவித்தது.

மின் இணைப்பு ஒன்றில் சிறிதாக தீ ஏற்பட்டதாகவும், குடிமைத் தற்காப்பு படை வீரர்கள் வருவதற்கு முன்பே, அந்த தீ தானாக அணைந்து விட்டதாகவும் மருத்துவமனைக் கூறியது.

இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக நோயாளிகள், ஊழியர்கள் உட்பட 70 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் சிங்கப்பூர் பொது மருத்துவமனை தெரிவித்தது.

சம்வத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விசாரணைத் தொடங்குகிறது.

நோயாளிகளுக்கு ஏற்பட்ட அந்த இடையூறுக்கு மருத்துவமனை மன்னிப்பு கேட்டுக்கொண்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்