'இனவாதக் கருத்துகளுக்குப் பதிலடியாக, இனவாதக் கருத்துகளைத் தெரிவிப்பது சரியல்ல' - அமைச்சர் சண்முகம்
இனவாதப் போக்கு பற்றிப் பேசும்போது, அதிகாரிகளும் பொதுமக்களும் கவனமாக நடந்துகொள்வதன் அவசியத்தை அவர், CNA938 வானொலிக்கு அளித்த பேட்டியில் வலியுறுத்தினார்.
சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், இன ரீதியான விருப்பு-வெறுப்புகளை வெளிப்படையாகத் தெரிவிப்பதும் அதனை இயல்புநிலையாக மாற்றும் முயற்சிகளும், இனவாதத்தில் ஈடுபடுவதற்குச் சமம் எனத் தெரிவித்துள்ளார்.
இனவாதப் போக்கு பற்றிப் பேசும்போது, அதிகாரிகளும் பொதுமக்களும் கவனமாக நடந்துகொள்வதன் அவசியத்தை அவர், CNA938 வானொலிக்கு அளித்த பேட்டியில் வலியுறுத்தினார்.
இனவாதக் கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் எனத் தெரிவித்த திரு. சண்முகம், அத்தகைய கருத்துகளுக்குப் பதிலடியாக மேலும் பல இனவாதக் கருத்துகளைப் பொதுமக்கள் தெரிவிப்பது சரியல்ல என்றார்.