Shangri-La கலந்துரையாடல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும்
சிங்கப்பூரில் Shangri-La கலந்துரையாடல், அடுத்த ஜூன் மாதம் நடைபெறவிருக்கிறது.
சிங்கப்பூரில் Shangri-La கலந்துரையாடல், அடுத்த ஜூன் மாதம் நடைபெறவிருக்கிறது.
நோய்ப்பரவல் காரணமாக அந்தப் பாதுகாப்பு தொடர்பான உயர்நிலைச் சந்திப்பு ஈராண்டாக ரத்து செய்யப்பட்டது.
அது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் தேதிமுதல், 12ஆம் தேதி வரை நடைபெறும் என அனைத்துலக உத்திபூர்வ ஆய்வுக் கழகம் தெரிவித்தது.
நோய்ப்பரவலுக்கு முன்பு, அந்தச் சந்திப்பு, 2002ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் நடைபெற்று வந்தது.
அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள், வர்த்தகத் தலைவர்கள், பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் எனப் பல தரப்பினர் அதில் கலந்துகொண்டுள்ளனர்.
ஆசியா எதிர்நோக்கும் பாதுகாப்புச் சவால்கள் குறித்துக் கலந்துபேசுவது நோக்கம்.
இவ்வாண்டு ஜூன் மாதம் அந்தச் சந்திப்பு நடைபெறவிருந்தது.
சிங்கப்பூரில் சமூக அளவில் நோய்ப்பரவல் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அது ரத்துசெய்யப்பட்டது.