Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிறப்புப் பயண ஏற்பாடு - அதிகரித்துள்ள தேவைக்கேற்ப A380 ரக விமானங்களை மீண்டும் பயன்படுத்தவுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், அதன் A380 ரக விமானங்களை மீண்டும் பயன்படுத்தவுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், அதன் A380 ரக விமானங்களை மீண்டும் பயன்படுத்தவுள்ளது.

அந்த ரக விமானங்கள், சிங்கப்பூருக்கும் லண்டனுக்கும் இடையிலான நேரடி விமானச் சேவைகளில் அடுத்த மாதம் முதல் ஈடுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சிறப்புப் பயண ஏற்பாட்டின்கீழ் பயணிகளிடையே சேவைகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ள வேளையில், அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

A380 ரக விமானம் எப்போதும் வாடிக்கையாளர்களிடையே பிரபலமான தெரிவாக உள்ளது என்றும், அதனை மீண்டும் பயன்படுத்துவதில் மகிழ்ச்சி கொண்டுள்ளதாகவும் நிறுவனம் சொன்னது.

A380 ரக விமானங்கள் தற்போதைக்குக் குறுகிய-காலப் பயணங்களுக்கு தேவைக்கேற்ப பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.

நேற்றைய நிலவரப்படி, சிறப்புப் பயண ஏற்பாட்டின் கீழ் பயணம் மேற்கொள்வோரில் 40 விழுக்காட்டினர், பிரிட்டனிலிருந்து வருபவர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்