Sim Lim Square கடைத்தொகுதியில் தீ - 150 பேர் வெளியேற்றம்
Sim Lim Square கடைத்தொகுதியில் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து சுமார் 150 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
Sim Lim Square கடைத்தொகுதியில் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து சுமார் 150 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடைத்தொகுதியின் 5ஆம் தளத்தில் தீ மூண்டது.
நண்பகல் 12 மணியளவில் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
குப்பைத் தொட்டியில் கிடந்த பொருள்களால் தீ மூண்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
நெருப்பு மூண்டதும், கடைத்தொகுதியின் தெளிப்பான்கள் செயல்படத் தொடங்கின. குடிமைத் தற்காப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயை அணைத்தனர்.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.