சிண்டா உன்னத விருதைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 26 % உயர்வு
சிண்டா உன்னத விருதைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 26 விழுக்காடு உயர்ந்துள்ளது.
சிண்டா உன்னத விருதைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 26 விழுக்காடு உயர்ந்துள்ளது.
அவர்களில் சுமார் 20 விழுக்காட்டினர் சிண்டாவின் திட்டங்களால் பயன்பெற்றவர்கள்.
அத்தகைய மாணவர்கள், மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பார்கள் என சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் கூறினார்.
இம்முறை புதிய அனைத்துலக-தேசிய நிலைப் பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
உலக அரங்கில், வெவ்வேறு துறைகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த மாணவர்களை அங்கீகரிக்க, அந்தப் பிரிவுகள் உதவும்.
இணையம் வழி நடைபெற்ற விருது நிகழ்ச்சியில், 19 பிரிவுகளில், 653 மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.