சிங்கப்பூர் முழுவதும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை
சிங்கப்பூரில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியிருக்கிறது.
சிங்கப்பூரில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியிருக்கிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, 24 மணிநேர PSI குறியீட்டில், 103க்கும் 118க்கும் இடைப்பட்ட அளவில் பதிவானது.
தெற்குப் பகுதி: 118
வடக்குப் பகுதி: 105
மேற்குப் பகுதி: 109
கிழக்குப் பகுதி: 109
மத்திய பகுதி: 103
அந்தக் குறியீட்டில் நூறுக்கும் அதிகமாகப் பதிவானால், அது ஆரோக்கியமற்ற நிலையைக் குறிக்கும்.
இம்மாத இறுதி வரை, புகைமூட்டம் தொடரலாம் என தேசிய சுற்றுப்புற அமைப்பு முன்னரைத்துள்ளது.
இந்த வட்டாரத்தில், வறண்ட பருவநிலை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுவது அதற்குக் காரணம்.