உலகில் பயணம் செல்வதற்கு ஆகப் பாதுகாப்பான இடமாக சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகத் தேர்வு
உலகில் பயணம் செல்வதற்கு ஆகப் பாதுகாப்பான இடமாக சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலகில் பயணம் செல்வதற்கு ஆகப் பாதுகாப்பான இடமாக சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. Gallup நிறுவனம் நடத்திய ஆய்வில் அது தெரிய வந்துள்ளது. 142 நாடுகளைச் சேர்ந்தோர் ஆய்வில் கலந்துகொண்டனர்.
உள்ளூர்க் காவல்துறை மீதான நம்பிக்கை, தனிப்பட்ட பாதுகாப்பு, திருட்டுச் சம்பவ விகிதம் ஆகியவற்றைக் கொண்டு நாடுகள் பட்டியிலடப்படுகின்றன. அதிகபட்சம் 100 புள்ளிகளை ஒவ்வொரு நாடும் பெற முடியும்.
கடந்தாண்டும் இந்த ஆண்டும், சிங்கப்பூர் 97 புள்ளிகள் பெற்று பட்டியலின் முதலிடத்தில் வந்தது. அதன் விவரங்கள் இதோ
சிங்கப்பூர்(97)
நார்வே(93)
ஐஸ்லந்து(93)
ஃபின்லந்து(93)
உஸ்பெக்கிஸ்தான்(91)
ஹாங்காங்(91)
சுவிட்சர்லந்து(90)
கனடா(90)
இந்தோனேசியா(89)
டென்மார்க்(88)