சிங்கப்பூரில் புதிதாக 1,275 பேருக்கு COVID-19 தொற்று உறுதி; 2 மாதங்களில் பதிவான ஆகக் குறைவான தினசரி பாதிப்பு
சிங்கப்பூரில் புதிதாக 1,275 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் புதிதாக 1,275 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 21-ஆம் தேதியிலிருந்து பதிவான ஆகக் குறைவான தினசரி எண்ணிக்கை அது.
அவர்களில்...
- உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 1,259
- சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 1,228
- அவர்களில் 60 வயதைத் தாண்டிய மூத்தோர்: 167
- வெளிநாட்டு ஊழியர் விடுதியைச் சேர்ந்தவர்கள்: 31
- வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்: 16
- சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் : 258,785
- வாராந்திர நோய்த்தொற்று விகிதம்: 0.72
அது தொடர்ந்து 13 நாள்களாக ஒன்றுக்குக் கீழ் பதிவாகியுள்ளது.
வாராந்திர நோய்த்தொற்று விகிதம் என்பது கடந்த ஒரு வாரத்திலும் அதற்கு முந்திய ஒரு வாரத்திலும் சமூக அளவில் பதிவான தொற்றுச் சம்பவங்களுக்கு இடையிலான விகிதம்.