சிங்கப்பூரில் புதிதாக 396 பேருக்குக் கிருமித்தொற்று; சமூக அளவில் மூவருக்குப் பாதிப்பு
சிங்கப்பூரில் இன்று புதிதாக 396 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இன்று புதிதாக 396 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
சமூக அளவில், மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. .
புதிதாகக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோரில் மூவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.
சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து அவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர்.