சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு சற்றே உயரவுள்ளது - சிங்கப்பூர் நாணய வாரியம்
சிங்கப்பூர் நாணய வாரியம், சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு சற்றே உயர்வதற்கு அனுமதித்துள்ளது.
சிங்கப்பூர் நாணய வாரியம், சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு சற்றே உயர்வதற்கு அனுமதித்துள்ளது.
வாரியம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் அவ்வாறு செய்யுமென்று எதிர்பார்த்திருந்த சந்தை கவனிப்பாளர்களுக்கு, அது சற்று ஆச்சரியத்தை அளித்துள்ளது.
பணவீக்கம் அதிகரித்துவரும் சூழலில், பொருள்களின் விலையை இடைக்காலத்துக்கு நிலையாக வைத்திருக்க வாரியம் விரும்புகிறது.
அதிகமான நாடுகள் எல்லையைத் திறந்துவரும் நிலையில், பொருளியல், எதிர்பார்த்ததைக் காட்டிலும் விரைவில் வளர்ச்சி காணும் என்ற சமிக்ஞையை அண்மை அறிவிப்பு விடுப்பதாக கவனிப்பாளர்கள் நம்புகின்றனர்.
விநியோகத் தொடர்ச்சி தடைபடுதல், சீனாவிலிருந்து பொருள்கள் வருவதில் தாமதம், வீட்டுக் கட்டுமானப் பணியில் தாமதம் முதலியவற்றால் பணவீக்கம் ஏற்படுவதாக அவர்கள் கூறினர்.
ஆனால், வலுவான சிங்கப்பூர் வெள்ளி, வெளிநாட்டுக்குப் பயணம் செய்வோருக்குச் சாதகமான பரிவர்த்தனை விகிதத்தைத் தரும் என்பதை கவனிப்பாளர்கள் சுட்டினர்.
வரும் நாள்களில், சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு இன்னும் உயரவே செய்யுமெனச் சந்தை கவனிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.