மழைக்காட்டிற்குள் மகிழ்நடை
சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தின் 45ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வரும் ஜூலையில் மழைக்காட்டிற்குள் இரவில் நடந்து மகிழலாம்.
சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தின் 45ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வரும் ஜூலையில் மழைக்காட்டிற்குள் இரவில் நடந்து மகிழலாம்.
பயணத்துறை மாநாட்டில் சிங்கப்பூர்ப் பயணக் கழகம் அதனைத் தெரிவித்தது.
Rainforest Lumina என்பது இரவு நடையின் பெயர். ஒரு கிலோ மீட்டர் நீளப் பாதையில் வருகையாளர்கள் சுயமாகவே பாதையைத் தேடிச்சென்று சுற்றிவர முடியும்.
அந்த உல்லாச நடைபாதையில் பல்லூடக அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.
விலங்குகளுக்கு அதிகத் தொந்தரவு நேராதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.