வரவுசெலவுத் திட்டம் 2019: Scale-up SG திட்டம் குறித்து சிறிய, நடுத்தர நிறுவனங்களின் கருத்துகள்
இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அவற்றை மேம்படுத்திக்கொள்ளவும் புத்தாக்கமுறையில் சிந்திக்கவும் இரண்டு புதிய திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அவற்றை மேம்படுத்திக்கொள்ளவும் புத்தாக்கமுறையில் சிந்திக்கவும் இரண்டு புதிய திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஸ்கேல்-அப் எஸ்ஜி (Scale-up SG) திட்டம், புத்தாக்க ஆலோசகர்கள் திட்டம் ஆகியவற்றின்மூலம் நிறுவனங்கள் அவற்றை மேம்படுத்திக்கொள்ளலாம்.
நல்ல வளர்ச்சி கண்டுவரும் உள்ளூர் நிறுவனங்கள் அவற்றின் ஆற்றல்களை மேம்படுத்திக்கொள்ளவும் புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்ளவும் ஸ்கேல்-அப் எஸ்ஜி திட்டம் உதவும்.
ஈராண்டுப் புத்தாக்க ஆலோசகர் முன்னோடித் திட்டத்தின்கீழ் நிறுவனங்கள், புத்தாக்க முயற்சிகள் குறித்து துறைசார்ந்த நிபுணர்களின் ஆலோசனையைப் பெற முடியும்.
மின்னிலக்க முறைகளைச் செயல்படுத்த நிறுவனங்களுக்குக் கூடுதல் உதவியும் வழங்கப்படும்.
இந்தத் திட்டங்கள் பற்றி சிறிய, நடுத்தர நிறுவன உரிமையாளர்கள் என்ன நினைக்கின்றனர்? அறிந்து வந்தது செய்தி.