Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

SMRT மீண்டும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும்: புதிய தலைமை நிர்வாக அதிகாரி

SMRT நிறுவனம் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறும் என அதன் புதிய தலைமை நிர்வாக அதிகாரி நியோ கியான் ஹொங் (Neo Kian Hong) கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
SMRT மீண்டும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும்: புதிய தலைமை நிர்வாக அதிகாரி

(படம்:Matthew Mohan/ CNA)

SMRT நிறுவனம் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறும் என அதன் புதிய தலைமை நிர்வாக அதிகாரி நியோ கியான் ஹொங் (Neo Kian Hong) கூறியிருக்கிறார்.

நம்பகமான சேவை வழங்குவது, தமது தலைமைத்துவத்தின்-கீழ், அந்தப் போக்குவரத்துச் சேவை நிறுவனத்தின் அடிப்படைத் தேவை என்றார் அவர்.

நிறுவனத்தின் பீஷான் பணிமனைக்குச் சென்று பார்வையிட்டபோது, செய்தியாளர்களிடம் திரு. நியோ பேசினார்.
நிறுவனத்துக்காக மூன்று இலக்குகளை வகுத்திருப்பதாக அவர் சொன்னார்.

நம்பகத்தன்மையை வழங்குவது, நீடித்து நிலைத்திருக்கக்கூடிய நிலையை உருவாக்குவது, தொடர் மேம்பாட்டை உறுதிசெய்வது ஆகியன அந்த இலக்குகள்.

ஒரு ரயில் சேவை நிறுவனமாக, பாதுகாப்பான, நம்பகமான ரயில் சேவைகளை வழங்குவதில் SMRT கவனம் செலுத்தும் என்றார் திரு. நியோ.
போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் (Khaw Boon Wan), SMRT, நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் திரு. நியோவுடன் இன்று (ஆகஸ்ட் 13) காலை பீஷான் பணிமனைக்குச் சென்றிருந்தனர்.

கடந்த நவம்பர் மாதம் ஜூ கூன் MRT நிலையத்தில் ரயில்கள் மோதிக்கொண்ட சம்பவம், பீஷான் - பிரேடல் MRT நிலையங்களுக்கு இடையில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளம் போன்றவை SMRT நிறுவனத்தை அண்மைக் காலத்தில் பாதித்த சில சம்பவங்களில் அடங்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்