Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சொமர்செட் ரயில் நிலையத்தில் தீ - இருவர் மருத்துவமனையில்

சொமர்செட் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) தீ மூண்டதைத் தொடர்ந்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சொமர்செட் ரயில் நிலையத்தில் தீ - இருவர் மருத்துவமனையில்

(படம்: Facebook/SMRT)

சொமர்செட் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) தீ மூண்டதைத் தொடர்ந்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

நள்ளிரவுக்குப் பிறகு, 12.45 மணிக்கு நிலத்தடி ரயில் நிலையங்களில் ஒன்றான சொமர்செட் நிலையத்தில் தீ மூண்டது.

ரயிலை இழுக்கும் இயந்திரத்தில் தீப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.

குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்திற்கு வரும் முன்னரே நிலையத்தின் SMRT ஊழியர்கள் தீயை அணைத்ததாய்த் தெரிவிக்கப்பட்டது

புகையைச் சுவாசித்ததால் இருவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர் என்று கூறப்பட்டது. 

தீ மூண்டதற்கான காரணம் ஆராயப்படுகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்