Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19: ஸ்பெயினில் மாண்டோர் எண்ணிக்கை சீனாவைத் தாண்டியது

COVID-19: ஸ்பெயினில் மாண்டோர் எண்ணிக்கை சீனாவைத் தாண்டியது

வாசிப்புநேரம் -
COVID-19: ஸ்பெயினில் மாண்டோர் எண்ணிக்கை சீனாவைத் தாண்டியது

(படம்: Reuters/Comunidad de Madrid/Handout)

COVID-19 கிருமித்தொற்றால் ஸ்பெயினில் மாண்டோர் எண்ணிக்கை 3,434 ஆகப் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்நாட்டில் 738 பேர் மாண்டனர்.

ஸ்பெயினில் மாண்டவர்கள் எண்ணிக்கை சீனாவில் பதிவானதை விட அதிகமாகியிருக்கிறது.

கிருமித்தொற்றால் இதுவரை ஸ்பெயினில் 47,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 11ஆவது நாளாக நாடு முடக்கப்பட்டுள்ளது.

கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் போன்று மற்ற ஐரோப்பிய நாடுகளும் தடுமாறி வருகின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், வரும் நாள்களில் பல நாடுகள் மருத்துவப் பொருள்கள் இல்லாமல் தடுமாறலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்