மூன்றாம் முறையாக 'தமிழோடு விளையாடு' சொல்வதெழுதுதல் போட்டி
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் 'தமிழோடு விளையாடு' போட்டியின் மூன்றாம் அத்தியாயத்தின் முதல் சுற்று இன்று தொடங்கியுள்ளது.
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் 'தமிழோடு விளையாடு' போட்டியின் மூன்றாம் அத்தியாயத்தின் முதல் சுற்று இன்று தொடங்கியுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு இம்முறை, 80க்கும் அதிகமான பள்ளிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவில் போட்டி இடம்பெறுகிறது.
பிழையின்றி மாணவர்கள் தமிழ்மொழியில் எழுத ஊக்குவிப்பது, சொல்வளத்தைப் பெருக்குவது, தமிழ்மொழி மீதான ஆர்வத்தை அதிகரிப்பது ஆகியவை போட்டியின் நோக்கங்கள்.