Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

St Joseph’s கழகத்தில் உயரத்திலிருந்து விழுந்த பதின்ம வயது ஆடவர் - மருத்துவமனையில்

செயின்ட் ஜோசஃப் கழகத்தில் (St Joseph’s Institution) உயரத்திலிருந்து விழுந்த பதின்ம வயது ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
St Joseph’s கழகத்தில் உயரத்திலிருந்து விழுந்த பதின்ம வயது ஆடவர் - மருத்துவமனையில்

(படம்: Jeremy Long)

செயின்ட் ஜோசஃப் கழகத்தில் (St Joseph’s Institution) உயரத்திலிருந்து விழுந்த பதின்ம வயது ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இன்று காலை சுமார் 11.40 மணி அளவில், 38 மேல்கம் ரோட்டிலிருந்து (Malcolm Road) உதவி கேட்டு அழைப்பு வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

அது அந்தப் பள்ளியின் முகவரி.

பதின்ம வயது ஆடவர் ஒருவர் உயரத்திலிருந்து விழுந்துவிட்டதாகவும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவருக்குச் சுயநினைவு இருந்ததாகவும் காவல்துறை சொன்னது.

சம்பவம் தொடர்பில், தீய நோக்கம் ஏதும் இருப்பதாகச் சந்தேகிக்கப்படவில்லை என அது கூறியது.

KK மகளிர், சிறார் மருத்துவமனைக்கு ஒருவர் கொண்டு செல்லப்பட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்