Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஸ்ட்ராஸ்பர்க் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் - சிங்கப்பூரர் எவருக்கும் காயமில்லை

ஃபிரான்சில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், சிங்கப்பூரர் எவருக்கும் காயமில்லை என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இன்று (டிச 12) தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஸ்ட்ராஸ்பர்க் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் - சிங்கப்பூரர் எவருக்கும் காயமில்லை

(படம்:Frederick FLORIN/AFP)

ஃபிரான்சில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், சிங்கப்பூரர் எவருக்கும் காயமில்லை என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இன்று (டிச 12) தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு சிங்கப்பூர் கண்டனம் தெரிவித்துள்ளது.

மாண்டோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்த அமைச்சு, காயமடைந்தோர் விரைவில் குணமடைவர் என நம்பிக்கை தெரிவித்தது.

நிலவரத்தைக் கண்காணித்து பிரெஞ்சு அதிகாரிகளின் ஆலோசனைக்கு ஏற்ப நடந்துகொள்ளுமாறு அங்குள்ள சிங்கப்பூரர்களை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், சொந்தப் பாதுகாப்புப் பற்றி சிங்கப்பூரர்கள் உற்றார் உறவினருக்குத் தெரியப்படுத்துமாறும் அமைச்சு சிங்கப்பூரர்களை வலியுறுத்தியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்