சுங்கை காடுட் அறைகலன் கிடங்கில் தீ
சுங்கை காடுட்டிலிருக்கும் (Sungei Kadut) அறைகலன் கிடங்கில் இன்று (டிசம்பர் 16) அதிகாலை தீப்பற்றியதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
சுங்கை காடுட்டிலிருக்கும் (Sungei Kadut) அறைகலன் கிடங்கில் இன்று (டிசம்பர் 16) அதிகாலை தீப்பற்றியதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
அதிகாலை 3 மணி அளவில் அந்தக் கிடங்கில் தீப்பற்றிய தகவல் கிடைத்ததாக அது கூறியது.
சம்பவ இடமான 31, சுங்கை காடுட் ஸ்ட்ரீட் 2-க்கு 25 அவசர வண்டிகளோடு சுமார் 90 தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
12 குழாய்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சியடித்து 4 மணி நேரம் போராடி தீயணைப்பாளர்கள் தீயை அணைத்தனர்.
அருகிலிருந்த கட்டடங்களுக்குத் தீ பரவவில்லை.
சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீச் சம்பவத்திற்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.