தால் எரிமலைக்கு அருகில் உள்ள பகுதிகளுக்குப் பயணத்தைத் தவிர்க்கவும்: வெளியுறவு அமைச்சு
பிலிப்பீன்சின் தால் எரிமலைக்கு அருகில் உள்ள பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவு அமைச்சு ஆலோசனை விடுத்துள்ளது.
பிலிப்பீன்சின் தால் எரிமலைக்கு அருகில் உள்ள பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவு அமைச்சு ஆலோசனை விடுத்துள்ளது.
எந்த நேரத்திலும் எரிமலை வெடிக்கக்கூடும் என்பது அதற்குக் காரணம்.
எரிமலை தொடர்பான விழிப்புநிலை 4க்கு உயர்த்தப்பட்டிருப்பதாக பிலிப்பீன்ஸ் எரிமலை, நிலநடுக்க ஆய்வகம் கூறியுள்ளதை அமைச்சு அதன் அறிக்கையில் சுட்டியது.
ஆபத்தான வகையில் பெரும் வெடிப்பு நேரக்கூடும் என்று அமைச்சு குறிப்பிட்டது.