இன்னிசையுடன் இனிதே தொடங்கிய தமிழ்ச்சுடர் 2019
தமிழ்ச்சுடர் 2019 நிகழ்ச்சி இன்னிசையுடன் இனிதே தொடங்கியுள்ளது.
தமிழ்ச்சுடர் 2019 நிகழ்ச்சி இன்னிசையுடன் இனிதே தொடங்கியுள்ளது.
தமிழ்ச் செய்தி நடப்பு விவகாரப் பிரிவு ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் நிகழ்ச்சி தமிழ்ச்சுடர். கல்வி, கலை, புத்தாக்கம், இளம் சாதனையாளர், வாழ்நாள் சாதனையாளர் ஆகிய பிரிவுகளில் 8 விருதுகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, நிகழ்ச்சியின் இணை ஏற்பாட்டாளர்.
விருது வழங்கும் நிகழ்ச்சி ஷங்ரிலா ஹோட்டலில் இன்று (8 நவம்பர் 2019) நடைபெறுகிறது.
ஹரி சந்தோஷ் சுப்பிரமணியம், நிரஞ்சன் பாண்டியன், பவன் சுகோஷ் ஆகிய இசைக் கலைஞர்கள் வருகையாளர்களை இன்னிசையில் திளைக்க வைத்தனர்.
சமூகத் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என 250க்கும் மேற்பட்டோர் விருது நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.
செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான திரு. விக்ரம் நாயர் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.