'தமிழ்மொழி மாதம் 2019' - நிகழ்ச்சிகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்க இளையர்கள் ஆர்வம்
தமிழ்மொழி விழாவுக்கு அதிகமானோரை ஈர்க்க, பல உத்திகளை வளர்தமிழ் இயக்கம் கையாண்டு வருகிறது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
தமிழ்மொழி விழாவுக்கு அதிகமானோரை ஈர்க்க, பல உத்திகளை வளர்தமிழ் இயக்கம் கையாண்டு வருகிறது.
அதன்தொடர்பில் ஆண்டுதோறும் பொதுவிளம்பர நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.
இவ்வாண்டு இடம்பெற்ற அந்த நிகழ்ச்சியில், முன்னைய ஆண்டைவிட அதிகமானோர் பங்கேற்றனர்.
குறிப்பாக, இளையர்களின் பங்களிப்பு அதிகரித்தது.
எதிர்வரும் தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்ற குறிக்கோளுடன் அவர்கள் காலை 10 மணிக்கு கேம்பல் லேனில் கூடினர்.
இம்மாதம் 23ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28ஆம் தேதி வரை மாறுபட்ட, சுவையான நிகழ்ச்சிகளுடன் தமிழ்மொழி விழா தீவெங்கும் களைகட்டவுள்ளது.
மொத்தம் 46 நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.