Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழ்ச்சுடர் விருதுகளில் புத்தம் புதிய 'புத்தாக்கப்' பிரிவு...யாரெல்லாம் பங்கெடுக்கலாம்?

இவ்வாண்டின் தமிழ்ச்சுடர் விருதுகளில் புதிய பிரிவு ஒன்று இடம்பெறவுள்ளது.

வாசிப்புநேரம் -

இவ்வாண்டின் தமிழ்ச்சுடர் விருதுகளில் புதிய பிரிவு ஒன்று இடம்பெறவுள்ளது.

தமிழ் மொழியில் புத்தாக்கத்தைப் புகுத்தும் நபர்களை அங்கீகரிக்க முனைகிறது புதிய விருது.

சமூக ஊடகத்திலோ, மின்னிலக்க உலகிலோ தமிழ் மொழியைப் புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் செல்வோர் இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம்.

அல்லது அன்றாட வாழ்க்கையில் புத்தாக்கமான முறைகளில் தமிழ் மொழிப் புழக்கத்தை அதிகரிக்க முனைவோரும் இந்தப் பிரிவுக்குத் தகுதி பெறுவர்.

நீங்கள் புத்தாக்க முறைகளைக் கையாண்டு தமிழ் மொழிக்குப் பங்காற்றி வருகிறீர்கள் என்றால் விருதுகளுக்கு இப்போதே விண்ணப்பம் செய்யலாம்.

உங்களுக்கு அப்படி யாரையேனும் தெரிந்தால் அவர்களையும் நீங்கள் முன்மொழியலாம்.

விண்ணப்பம் செய்ய: https://survey.zohopublic.com/zs/HkCNRh

தேவைப்படும் விவரங்கள்:

- பெயர்
- மின்னஞ்சல் முகவரி
- தொலைபேசி எண்
- சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி
- உங்களைப் பற்றிய அல்லது முன்மொழியப்பட்டவரைப் பற்றிய சிறு குறிப்பு (250 சொற்களுக்குள்)
- புத்தாக்கமான முயற்சிகளின் மூலம் கிட்டிய சாதனைகள், அவற்றால் விளைந்த பலன்கள் (500 சொற்களுக்குள்)

விண்ணப்பம் செய்ய இறுதி நாள் அக்டோபர் 7.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்