தெம்பனிஸில் 3 பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்து - 11 பேர் மருத்துவமனையில்
தெம்பனிஸில் 3 பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்து - 11 பேர் மருத்துவமனையில்
தென்பனிஸ் வட்டாரத்தில் நேற்று 3 பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 11 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதில் 10 பேர் பயணிகள் என்றும் ஒருவர், பேருந்து ஒன்றின் ஓட்டுநர் என்று காவல்துறை தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட பயணிகள் 21 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். விபத்தைத் தொடர்ந்து சுயநினைவோடு இருந்த அவர்கள், சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
பேருந்துகளில் இரண்டு தன்னுடைய செயல்பாட்டில் உள்ளதை SBS Transit நிறுவனம் இன்று உறுதிப்படுத்தியது. அவை சேவை எண் 19 மற்றும் 37.
மற்றொறு பேருந்துச் சேவை எண் 34, Go Ahead நிறுவனத்தினுடையது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவருவதாக நிறுவனங்கள் தெரிவித்தன.
சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டுவருகிறது.