தெம்பனிஸ் வட்டாரத்தில் தீப்பற்றிக்கொண்ட கார்
தெம்பனிஸ் வட்டாரத்தில் நேற்றிரவு கார் ஒன்று தீப்பற்றிக்கொண்டது. தெம்பனிஸ் அவென்யூ 2, தெம்பனிஸ் ஸ்டிரீட் 23 சாலைச் சந்திப்பில் அந்தச் சம்பவம் நேர்ந்தது.
தெம்பனிஸ் வட்டாரத்தில் நேற்றிரவு கார் ஒன்று தீப்பற்றிக்கொண்டது. தெம்பனிஸ் அவென்யூ 2, தெம்பனிஸ் ஸ்டிரீட் 23 சாலைச் சந்திப்பில் அந்தச் சம்பவம் நேர்ந்தது.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு அது குறித்து இரவு 8.50 மணியளவில் தகவல் அளிக்கப்பட்டது.
குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்தைச் சென்றடைவதற்கு முன்னரே, ஓட்டுநரும் பயணி ஒருவரும் காரிலிருந்து வெளியேறினர். தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ மூண்டதற்கான காரணம் குறித்த விசாரணை நடத்தப்படுவதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.