Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தெம்பனிஸ் வட்டாரத்தில் தீ விபத்து: 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்

தெம்பனிஸ் வட்டாரத்தில் புளோக் 492E வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
தெம்பனிஸ் வட்டாரத்தில் தீ விபத்து: 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்

படம்: SCDF/Facebook

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தெம்பனிஸ் வட்டாரத்தில் புளோக் 492E வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இன்று காலை 9:15 மணியளவில் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ விபத்து 11ஆவது மாடியில் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து 9, 10, 11, 12 ஆகிய மாடிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் காவல்துறை அதிகாரிகளால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

ஆடவர் ஒருவரும் சிறுவர் ஒருவரும் மூச்சுத் திணறலுக்காக  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

தீயை அணைக்க உதவிய இரண்டு சமூக உதவியாளர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

குடிமைத் தற்காப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சும் கருவியைக் கொண்டு தீயை அணைத்தனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்