தெம்பனீஸ் கடைத்தொகுதியில் தனித்து விடப்பட்ட சிறுவன் - கொந்தளித்த இணையவாசிகள்
Tampines Mall கடைத்தொகுதிக்கு அருகே இன்று பிற்பகலில் மூன்று வயதுச் சிறுவன் தனியே கண்டுபிடிக்கப்பட்டதாக சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்தது.
Tampines Mall கடைத்தொகுதிக்கு அருகே இன்று பிற்பகலில் மூன்று வயதுச் சிறுவன் தனியே கண்டுபிடிக்கப்பட்டதாக சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்தது.
இன்று ( நவம்பர் 9) சுமார் 3.30 மணிக்கு சாலைச் சந்திப்பில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவனின் படத்தோடு Facebookஇல் பதிவு செய்யப்பட்டது.
சிறுவனின் பெற்றோர் காவல்துறையினரைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
சம்பவம் குறித்து அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்க முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இணையவாசிகள் பலர் பெற்றோரின் கவனக்குறைவைப் பற்றி கண்டனம் தெரிவித்தனர். இன்னும் சிலர் சிறுவன் பெற்றோருடன் மீண்டும் ஒன்றுசேர வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.
இரவு சுமார் 9 மணியளவில் சிறுவன், அவனுடைய தாயாரிடம் சேர்க்கப்பட்டதாகச் 'செய்தி' அறிகிறது.