Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தெம்பனீஸ் வீட்டில் $1000 திருடிய சந்தேகத்தின்பேரில் 13 வயதுச் சிறுவன் கைது

தெம்பனீஸில் உள்ள வீடு ஒன்றிலிருந்து $1000 திருடிய சந்தேகத்தின்பேரில் 13 வயதுச் சிறுவன் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -

தெம்பனீஸில் உள்ள வீடு ஒன்றிலிருந்து $1000 திருடிய சந்தேகத்தின்பேரில் 13 வயதுச் சிறுவன் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்றுக் காலை ஆறரை மணியளவில், Tampines Street 24இல் உள்ள வீடு ஒன்றில் 1000 வெள்ளி திருடு போனதாகக் காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டது.

காவல்துறைக் கண்காணிப்புக் கேமராக்கள் மூலமாகவும் புலனாய்வுகள் மூலமாகவும் பதின்ம வயதுச் சந்தேக நபரை அதிகாரிகள் அன்றைய தினமே அடையாளம் கண்டனர்.

அதேபோன்ற மற்றொரு சம்பவத்திலும் அந்த இளையர் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதுபற்றிய புலனாய்வு தொடர்வதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

குடியிருப்புப் பகுதியிலிருந்து திருடிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையோ, அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்