உட்லண்ட்ஸ் காவல் நிலையத்திலிருந்து நீர்க்குழாயைத் திருடிய ஆடவர்
உட்லண்ட்ஸ் காவல் நிலையத்தில் இருந்து, நீர்க்குழாயைத் திருடிய ஆடவருக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உட்லண்ட்ஸ் காவல் நிலையத்தில் இருந்து, நீர்க்குழாயைத் திருடிய ஆடவருக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் தமது சகோதரரைக் காவல் நிலையத்தில் இருந்து பிணையில் விடுவிக்கச் சென்றபோது, அந்த 50 வயது ஆடவர் நீர்க்குழாயைத் திருடினார்.
170 வெள்ளி மதிக்கத்தக்க அந்த நீர்க்குழாயைத் தமது வீட்டில் அவர் பொருத்திக்கொண்டார்.
காவல் நிலையத்தில் இருந்து நீர்க்குழாய் காணாமல்போனது பற்றி சில வாரங்களுக்குப் பிறகு தெரியவந்தது.
அது குறித்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சந்தேக நபர் அகப்பட்டார்.