கிட்டத்தட்ட அனைவரும் வருவாய்க் கணக்குகளைச் சமர்ப்பித்துவிட்டனர் - உள்நாட்டு வருவாய் ஆணையம்
சிங்கப்பூரில், இந்த ஆண்டு சாதனை அளவாக, கிட்டத்தட்ட அனைவரும் வருவாய்க் கணக்குகளைச் சமர்ப்பித்துவிட்டதாக, உள்நாட்டு வருவாய் ஆணையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில், இந்த ஆண்டு சாதனை அளவாக, கிட்டத்தட்ட அனைவரும் வருவாய்க் கணக்குகளைச் சமர்ப்பித்துவிட்டதாக, உள்நாட்டு வருவாய் ஆணையம் தெரிவித்துள்ளது.
வரி செலுத்துவோர், விவரங்களைச் சமர்ப்பிக்க, இம்மாதம் 18ஆம் தேதிவரை கெடு விதிக்கப்பட்டிருந்தது.
சுமார் தொண்ணூற்று-ஆறரை விழுக்காட்டினர், அதனைப் பின்பற்றியதாக ஆணையம் குறிப்பிட்டது.
சென்ற ஆண்டுடன் ஒப்புநோக்க அது அரை-விழுக்காடு அதிகம்.
780ஆயிரம் பேர் மின்னியல் முறையில் வருவாய் விவரங்களைச் சமர்ப்பித்தனர்.
இதுவரை தங்கள் வருவாய் விவரங்களைச் சமர்ப்பிக்காதோர் உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு ஆணையம் ஆலோசனை கூறியது.