Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முதியவர் மீது மோதிய டாக்ஸி ஓட்டுநர் பணி நீக்கம்

75 வயது முதியவர் மீது மோதிய ComfortDelGro டாக்ஸி ஓட்டுநர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக இன்று (17 ஏப்ரல்) அந்நிறுவனம் கூறியது. 

வாசிப்புநேரம் -

75 வயது முதியவர் மீது மோதிய ComfortDelGro டாக்ஸி ஓட்டுநர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக இன்று (17 ஏப்ரல்) அந்நிறுவனம் கூறியது.

யூனோஸ் கிரசென்ட்டில் நிகழ்ந்த அந்த விபத்தில் ஓட்டுநர் டாக்ஸியைப் பின்னோக்கிச் செலுத்தியபோது அது முதியவர்மீது மோதியது.

கை நிறையப் பைகளைத் தூக்கிச் சென்ற முதியவர்மீது டாக்ஸி மோதிய காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது.

விபத்துக்குள்ளான முதியவர் சாங்கி பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ஓட்டுநர் கவனமாக இருந்திருந்தால் அந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று ComfortDelGro குழுமத்தின் நிறுவனத் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்