73 வயது டாக்சி ஓட்டுநரிடம் கொள்ளை: இருவர் கைது
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் 3 முதல் 14 ஆண்டுவரையிலான சிறைத்தண்டனையும் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
73 வயது டாக்சி ஓட்டுநரிடம் கொள்ளையடித்த சந்தேகத்தின் பேரில் இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்தது.
சம்பவம் கடந்த வெள்ளியன்று நடந்தது.
டாக்சி ஓட்டுநர், அந்த இரு நபர்களையும் தங்ளின் ஹால்ட் ரோட்டில் (Tanglin Halt Road) இரவு 9.20 மணியளவில் ஏற்றிக்கொண்டார்.
பீஷான்- அங் மோ கியோ பூங்காவில் (Bishan-Ang Mo Kio Park) உள்ள திறந்தவெளிக் கார் நிறுத்துமிடத்தில் அவர்களை இறக்கிவிட்ட போது அவ்விருவரும் டாக்சி ஓட்டுநரைத் தடுத்து வைத்தனர்.
அவரிடமிருந்து 50 வெள்ளி ரொக்கத்தைக் கொள்ளையடித்து சம்பவ இடத்தில் இருந்து அவர்கள் தப்பியோடியதாகக் காவல்துறை தெரிவித்தது.
21 வயது ஆடவர் நேற்று ஹாலந்து டிரைவிலும், அவருக்கு உடந்தையாக இருந்த 20 வயது ஆடவர் இன்று அங் மோ கியோ அவென்யூ இரண்டிலும் கைதுசெய்யப்பட்டனர்.
இருவரும் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் 3 முதல் 14 ஆண்டுவரையிலான சிறைத்தண்டனையும் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.