அதிவேகத்தில் மின்னூட்டக்கூடிய 2 டாக்ஸிகள் சோதனைக்காக சிங்கப்பூர் சாலைகளில்...
அதிவேகத்தில் மின்னூட்டக்கூடிய 2 டாக்ஸிகள் இன்று முதல் (19 ஜுலை) சிங்கப்பூர் சாலைகளில் சோதனை செய்யப்படுவதாக ComfortDelGro நிறுவனம் அறிவித்துள்ளது.
அதிவேகத்தில் மின்னூட்டக்கூடிய 2 டாக்ஸிகள் இன்று முதல் (19 ஜுலை) சிங்கப்பூர் சாலைகளில் சோதனை செய்யப்படுவதாக ComfortDelGro நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது சாலைகளில் இயங்கும் டாக்ஸிகளை மின்னூட்டுவதற்கு 1 மணி நேரம் எடுக்கும் என்றும் புதிய வகை டாக்ஸிகள் 30 நிமிடத்திற்குக் குறைவான நேரத்தில் மின்னூட்டப்படலாம் என்றும் ComfortDelGro நிறுவனம் குறிப்பிட்டது.
முழுதாக மின்னூட்டப்பட்ட புதிய வகை டாக்ஸிகள், 200 கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் செல்ல முடியும் என நிறுவனம் கூறியது.
அதிலும், அவற்றை மின்னூட்டுவதற்கான செலவு டீசல் விலையில் மூன்றில் ஒரு பகுதி தான் என்று நிறுவனம் சுட்டியது.