சிங்கப்பூரின் 200ஆம் ஆண்டு நிறைவையொட்டிச் செட்டியார்கள் கோயில் குழுமம் வெளியிட்ட ஆவணப்படம்
செட்டிநாடு முதல் சிங்கப்பூர் வரை என்ற தலைப்பில் மூன்று பாகத் தொடராக ஐந்து நிமிடக் காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
சிங்கப்பூரின் 200ஆம் ஆண்டு நிறைவையொட்டி ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயம், ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயம் ஆகியவற்றை நிர்வகிக்கும் செட்டியார்கள் கோயில் குழுமம் ஆவணப்படத் தொடர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
செட்டிநாடு முதல் சிங்கப்பூர் வரை என்ற தலைப்பில் மூன்று பாகத் தொடராக ஐந்து நிமிடக் காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
1. வளமை நோக்கிய பயணம் 2. சிங்கப்பூரின் முன்னோடி வங்கியாளர்கள்
3. தைப்பூசக் கதைகள்
ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் காணொளிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரின் செட்டியார் சமூகத்தினரின் வரலாறு, அவர்கள் இங்கு வந்து தொழில் தொடங்கியது, தைப்பூசத் திருவிழாவை ஒட்டிய கதைகள் முதலியவற்றை அவை பிரதிபலிக்கின்றன.
சிங்கப்பூர்வாசிகளும் சுற்றுப்பயணிகளும் செட்டியார் சமூகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் காணொளிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.