Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சுவாசப் பிரச்சினை அறிகுறிகள் கொண்டோர் வாரயிறுதியில் பரிசோதனை செய்யக் கூடுதல் நிலையங்கள்

சுவாசப் பிரச்சினை அறிகுறிகள் கொண்டோர் வாரயிறுதியில் பரிசோதனை செய்யக் கூடுதல் நிலையங்கள்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் தற்போது சுவாசப் பிரச்சினைக்கான அறிகுறிகள் கொண்டவர்கள் தனியார்ப் பொது மருத்துவர்களிடம் சென்று PCR பரிசோதனை செய்துகொள்ளலாம்.

அவை SASH (Swab and Send Home) மருந்தகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இருப்பினும், அத்தகைய மருந்தகங்கள் அனைத்தும் வாரயிறுதிகளில் திறந்திருப்பதில்லை.

அதனால் நாளை முதல், வாரயிறுதிகளில் 8 வட்டாரப் பரிசோதனை நிலையங்களும், 3 விரைவுப் பரிசோதனை நிலையங்களும் செயல்படத் தொடங்கும்.

அதன் மூலம் வாரயிறுதிகளில் PCR பரிசோதனை செய்துகொள்வது எளிதாகும்.

ஆனால் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக, முன்பதிவு முறைகளில் மட்டுமே அவை செயல்படும்.

வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிவரை வாரயிறுதிக்கான முன்பதிவுகளைச் செய்துகொள்ள முடியும்.

www.go.gov.sg/ari-weekend-testing என்ற இணையப்பக்கத்தில் மேல்விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்